Also Watch
Read this
By: Manigandan Raja

லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது :
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட சோதனையில்
ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 700 பணம் மற்றும் 160 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சேகர் (63), த/பெ. மூர்த்தி, தட்டார தெரு, திருத்துறைப்பூண்டி என்பவரை திருவாரூர் சிறப்பு எஸ்.ஐ. கார்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் சேகர் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சட்டவிரோத லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகா பாங்கல் பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (43), த/பெ. கலியபெருமாள் மற்றும் பக்கிரிசாமி (60), த/பெ. பன்னீர்செல்வம் ஆகியோரும் பிடிபட்டனர்.
போலீசார் 160 லாட்டரி சீட்டுகள் (தங்கம் – 80, ரோசா – 80), ரூ.2,43,700 ரொக்கம், 4 செல்போன்கள், 3 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 10 வங்கி பாஸ்புக்குகளை பறிமுதல் செய்து, மூவரையும்
திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved