Also Watch
Read this
By: Web Team

மதுரையில் தவெக மாநாட்டிற்கு இரண்டு ஐஜிக்கள் தலைமையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தவெக 2ஆவது மாநில மாநாடு வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 5 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாநாட்டு திடலில் காவல்துறை சார்பில் இரண்டு ஐஜிக்கள், 10 காவல் கண்காணிப்பாளர்கள், 35 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 80 காவல் ஆய்வாளர்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும் தவெக சார்பில் 500 பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved