Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட வடமாநில தம்பதியின் 3 வயது குழந்தையை போலீசார் 3 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கோட்டார் சவேரியார் கோவிலில் கொடியேற்ற விழாவில் பலூன் விற்க மனைவி மற்றும் 3 வயது குழந்தையுடன் வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரஞ்சன், தனது சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது அவரது 3 வயது மகள் கடத்தப்பட்டார். இது குறித்து ரஞ்சன் அளித்த புகாரில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, பார்வதிபுரம் இறச்சகுளம் செல்லும் சாலையில் குழந்தையுடன் பதுங்கி இருந்த லோகேஷ் என்பவரை கைது செய்து குழந்தையை மீட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved