Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே அதிவேகமாக வந்த அரசு பேருந்து முன்னாள் சென்ற கார் மீது மோதியதில் கணவர் கண் முன்பே மனைவி உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த பிரவீன் - பிங்கி தம்பதி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றபோது முன்னாள் திடீரென டேங்கர் லாரி குறுக்கே வந்து திரும்பியுள்ளது. இதைக்கண்ட பிரவீன், திடீரென பிரேக் போடவே, பின்னால் வந்த அரசு பேருந்து கார் மீது மோதியது. இதில், டேங்கர் லாரிக்கும், பேருந்துக்கும் இடையில் கார் சிக்கி நொறுங்கிய நிலையில், பிரவீன் காரில் இருந்து இறங்கி உயிர் தப்பினார். விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved