Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் அருகே சாலையில் தாறுமாறாக சென்று விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாட்றம்பள்ளி அருகே அதிவேகமாக சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி நிற்காமல் சென்ற நிலையில், அதன் உரிமையாளர் பின்தொடர்ந்து சென்றார்.
அப்போது கதிரிமங்கலம் அடுகே கார், ஜேசிபி இயந்திரத்தின் மீது மோதி நின்ற நிலையில் காரில் இருந்த ஐந்து பேர் தப்பிச் சென்றனர்.
தகவலறிந்து வந்த போலீசார் ஆந்திராவில் இருந்து வந்த அந்த காரை சோதனை செய்த போது அதில் 14 செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved