Also Watch
Read this
By: Web Team

திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் அருகே திருடுவதற்காக வீடு ஒன்றில் நுழைந்த இளைஞர், அங்கேயே ஆனந்த குளியல் போட்டுவிட்டு, அங்கிருந்த சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு பயம் எதுவும் இல்லாமல் சாவகசமாக கதவை மூடிவிட்டு சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.கடந்த மாதம் 11ஆம் தேதி மேலபாலாமடை பகுதியில் முருகன் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர் மூவாயிரம் ரூபாயை திருடி சென்ற நிலையில், சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் ஒரு மாத தேடுதலுக்கு பின் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved