Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது மகேந்திரா தார் ஜீப் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த நபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மற்றும் ரைஸ்மில் உரிமையாளர் பழனிவாசன் ஆகியோர் போச்சம்பள்ளியிலிருந்து வந்தபோது குள்ளனூர் அருகே அதிவேகமாக பின்னால் வந்த ஜீப் மோதி சுமார் 300 அடி தூரம் வரை இழுத்து சென்றது. ஜீப் மரத்தில் மோதி நின்ற விபத்தில் பழனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்த தங்கவேல் இன்று உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved