Also Watch
Read this
By: Web Team

ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுக பாலம் உடைந்து தண்ணீர் லாரி தலைகுப்புற கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு தண்ணீர் வழங்க சென்ற லாரி துறைமுக பாலத்தின் வழியே சென்றபோது, திடீரென பள்ளம் ஏற்பட்டு அதன் நடுவே லாரி கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். பாலம் குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய மீனவர்கள் புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved