Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பூர் கோல்டன் நகர் அருகே உள்ள ஜோதி நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இந்த குடியிருப்பு பகுதியில்கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஒருவர் வீடு கட்டி உள்ளார் அந்த வீட்டை வழிபாட்டுத்தலமாக மாற்றி அந்த இடத்திற்கு ஏராளமான வெளி நபர்கள் வந்து செல்வதாகவும் சட்ட விரோத தொழுகை கூடத்திற்கு எந்த அனுமதி பெறாமல் இன்று தொழுகை நடத்தி உள்ளனர்.
இதற்கு அப்பகுதி மக்கள்,பெண்கள் இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்,இந்த சட்ட விரோதமாக தொழுகை நடக்கும் இடத்தில் அருகில் கோவில் பள்ளிக்கூட கட்டடங்கள் உள்ளன.
அனுமதி பெறாமல் இயங்கும் இந்த சட்டவிரோத தொழுகை கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அந்த தொழுகை கூடத்தின் முன்பு குவிந்து கோஷத்தை எழுப்பியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கோல்டன் நகர் ஜோதி நகர் பகுதியில் சேர்ந்த மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தொழுகை கூடத்தின் முன்பு இருந்து அவர்களை அப்புறப்படுத்தினார்.

இதன் காரணமாக போலீசாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் வீடு கட்டுவதாக கூறி அங்கு தொழுகை கூடம் அமைத்து சட்டவிரோதமாக தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இங்கு சட்டவிரோதமாக தொழுகை கூடம் கட்டப்படுவதாகவும் அதனை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மனு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved