Also Watch
Read this
By: Manigandan Raja

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் ஐந்து தலைமுறை சொந்தங்கள் ஒன்று கூடி சந்திக்கும் நிகழ்ச்சி ஆடல், பாடல் என வெகு சிறப்பாக நடைபெற்றது. குளக்கட்டைப்பட்டியை சேர்ந்தவர்கள் அருள்பாக்கி, நாச்சம்மாள் தம்பதியர். இந்த தம்பதிக்கு 9 குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களின் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் என ஐந்து தலைமுறையை கண்ட 180க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து இந்த விழாவை கொண்டாடினர். முதல் தலைமுறையான அருள்பாக்கி, நாச்சம்மாள் தம்பதியர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கடல் கடந்து வாழும் சொந்தங்களும் கலந்து கொண்டு ஆடிப்பாடி கொண்டாடினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved