Also Watch
Read this
By: Web Team

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சூர்யமூர்த்தி சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved