Also Watch
Read this
By: Web Team

சேலம் மாநகர் அதிமுக கிளைச் செயலாளராக உள்ள செந்தில் என்பவர், தங்களது 7.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்துக் கொண்டு, ஊரை விட்டு வெளியேற்ற முயற்சி செய்வதாக சேலம் சிவதாபுரம் பனங்காட்டை சேர்ந்த அர்ஜுனன்- ராணி தம்பதியினர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு அளித்தனர்.
நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் இபிஎஸ்-ஐ சந்தித்து மனு அளித்த பின், வாழ வழியும் இல்லை, தங்க இடமும் இல்லை எனக் கூறிய தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved