Also Watch
Read this
By: Web Team

புதுச்சேரியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளித்த அவர், அண்ணா திடல் மற்றும் அதனை சார்ந்த கடைகள், புதிய பேருந்து நிலைய கடைகள் மற்றும் மீன் அங்காடி ஆகியவற்றை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். முன்னதாக புதுச்சேரி காவல்துறைக்கு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் வழங்க தயாராக உள்ளதாக, எஸ்.பி-யை சந்தித்து கடிதம் வழங்கினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved