Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே அரியூர் நாடு பகுதியில் 20 ஆண்டுகளுக்கு பின் போடப்பட்டுள்ள சாலை ஏழே நாட்களில் பெயர்ந்து கொண்டு வருவதாக மலைவாழ் கிராம மக்கள் குற்றம்சாட்டினர். குழிவளவு தெவகாய்பட்டியிலிருந்து கருத்தமணி கிராமம் வரை இரண்டரை கிலோமீட்டர் தூரத்துக்கு 97 லட்சம் ரூபாய் செலவில் சாலை போடப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த சாலையை கூட அகற்றாமல் அதன் மீதே சாலையை தரமற்ற முறையில் போட்டுள்ளதாக மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved