Also Watch
Read this
By: Web Team

ஆடி அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வாழை தார் ஏல சந்தையில் வாழை தார் விலை உயர்ந்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழை தார் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மொந்தன் வாழை காய் ஒன்றுக்கு 10 ரூபாய்க்கும், செவ்வாழை காய் ஒன்றுக்கு 15 ரூபாய் வரையிலும் ஏலம் போனது. இதனால் குச்சிப்பாளையம், வெங்கரை, அனிச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved