Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் உதகை அருகே இரவு நேரத்தில் சாலையில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சியை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பைக மந்து என்னும் இடத்தில் இரவு நேரத்தில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை சாலையில் உலா வந்ததை கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் முக்கிய இடங்களில் வனத்துறை அதிகாரிகள் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved