Also Watch
Read this
By: Web Team

திருப்பூரில் முறையாக சம்பளம் வழங்காத எஸ்.டபிள்யூ.எம்.எஸ் என்ற ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிக்குள் உரிய சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இம்மாதத்திற்கான சம்பளத்தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விரைவில் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved