Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் சின்னமனூர் பொன்னகரத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய பாதிரியார் எடி.பிரான்சிஸ் தர்மானந்த் என்பவர் சாதிய ரீதியாக செயல்படுவதாக கூறி, அவரை உள்ளே வைத்து கேட்டை பூட்டி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கத்தோலிக்க மகாசபையில் கிறிஸ்தவத்திற்கு மாறிய பட்டியல் இன மக்களே பெரும்பான்மையாக உள்ள நிலையில், தேவாலய பணிகளில் பாதிரியார் எடி.பிரான்சிஸ் தங்களை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினர். கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி அலங்காரம் செய்வதற்காக வந்தவர்களையும் அவர் தடுத்ததாக குற்றம்சாட்டியதோடு, அவரை மாற்ற வேண்டுமென தேவாலயம் முன்பு கோஷங்களை எழுப்பினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved