Also Watch
Read this
By: Web Team

மார்கழி மாத பிறப்பையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதிகாலை முதலே வருகை தந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved