Also Watch
Read this
By: Manigandan Raja

டாஸ்மாக் கடை :
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே மக்கள் நெருக்காடி மிகுந்த ,அரசு தொடக்க பள்ளி ,வழிபாட்டு தலங்கள்,மருத்துவமனைகள் என மக்களுக்கு இடையூறாக செயல்படும் (கடை எண் 4831 ) கடையை நிரந்தரமாக மூட கேட்டு,
அப்துல்கலாம் சமூக அறக்கட்டளை மற்றும் மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர். கடையை திறக்கும் நேரத்தில் கடையை திறக்க விடாமல்
பெண்களும் திரளாக திரண்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடையை நிரந்தரமாக மூடப்படும் என கடை மேலாளர் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தால் போராட்டத்தை கைவிட்டனர்,
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved