Also Watch
Read this
Posted on: Nov 22, 2025 10:39 AM
By: Web Team

நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால் கரையார் அணையில் விநாடிக்கு மூவாயிரத்து 591 கன அடி நீர் அதிகரித்து நீர்மட்டம் ஒரே நாளில் சுமார் நான்கு அடி உயர்ந்தது. நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள இந்த காரையார் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 159 கன அடியில் இருந்து மூவாயிரத்து 591 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 111 அடியில் இருந்து 115 புள்ளி 2 அடியை எட்டியது. இதேபோன்று, சேர்வலார் அணையின் நீர்மட்டம் 126 புள்ளி 02 அடியில் இருந்து 130 புள்ளி 71 அடியை எட்டியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved