Also Watch
Read this
By: Web Team

புதுச்சேரி ஈ.சி.ஆர் சாலையில் சின்ன காலாப்பட்டு பகுதி மீனவர்கள் படகுகளுடன் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட படகுகளும் வலைகளும், கடல் அரிப்பு காரணமாக கடலில் அடித்து செல்லப்பட்டதாக புகார் தெரிவித்த மீனவர்கள், பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டினர். மேலும், கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காண தூண்டில் முள் வளைவு அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved