Also Watch
Read this
By: Web Team

டிட்வா புயல் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் தேவிபட்டினம் பகுதியில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு காரணமாகவே, விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதாக குற்றம்சாட்டிய விவசாயிகள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், மழை வெள்ளநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்துள்ளது. எனவே, நீர் வழித்தட ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றும் படி பொது மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved