Also Watch
Read this
Posted on: Mar 15, 2026 01:26 PM
By: Manigandan Raja

குடிநீர் வரவில்லை என குற்றச்சாட்டு :
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை எனக்கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலந்தக்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் மற்றம் எம்ஜிஆர் நகர் கிராமங்களுக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, 2 கிராம மக்களும் வெப்படை சேலம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved