Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம், பரதராமி அருகே இடத் தகராறில் அண்ணன் - தம்பி குடும்பத்தினர் ஒருவரையொருவர் மாறி மாறித் தாக்கிக் கொண்டதில் இருவர் வெட்டு காயம் அடைந்தனர். நல்லாகவுனியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சின்னராஜ்- சிந்துதுரை. சகோதரர்களான இருவருக்கும் இடையே இடத் தகராறு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவத்தன்று வழக்கம் போல் இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் மாறி மாறி வெட்டிக்கொண்டதில் சிந்துதுரையும் அவரது அண்ணன் மகனும் காயம் அடைந்தனர். பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved