Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பென்ட் செய்து உள்துறை கூடுதல் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசு பொது ஊழியர்களுக்கான விதிமுறைகளை மீறியதாகவும் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாகவும் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பி ஆக இருந்த சுந்தரேசன் தனக்கு வழங்கப்பட்ட அலுவலக வாகனம் திரும்ப பெறப்பட்டு விட்டதால்,
டிஎஸ்பி அலுவலகத்திற்கு நடந்து சென்ற வீடியோ ஊடகங்களில் வெளியானது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் 3 உயரதிகாரிகள் தன்னை டார்கெட் செய்வதாக பகிரங்கமாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved