Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் மாடக்குளம் பகுதியில் கபாலீஸ்வரி அம்மன் கோயில் முன்பு மேற்கூரை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார்.
தங்களது பகுதியில் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து தேங்கி மிகவும் அவதிக்குள்ளாவதால், வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அங்கு சென்று பார்வையிட்ட அமைச்சர் மூர்த்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், பாதாள சாக்கடை அமைக்கும் பணி விரைவுப்படுத்தப்படும் எனக் கூறினார்.
இதையும் படியுங்கள் : விளாங்கோம்பை வனப்பகுதியில் காட்டாற்றில் திடீர் வெள்ளம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved