Also Watch
Read this
By: Web Team

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்கை வனத்துறையினர் 4 மணி நேரம் போராடி பிடித்து சென்றனர்.
ஆர்.வி.நகர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாகவே இந்த குரங்கு குழந்தைகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்ததோடு, குழந்தைகளை கடித்தும் அட்டகாசம் செய்து வந்தது.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்த வனத்துறையினர், கூண்டு அமைத்து சுமார் 4 மணி நேரம் போராடி குரங்கை பிடித்தனர்.
அடுத்ததாக அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved