Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம், வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வெள்ளமலை மட்டம் பகுதியில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம், இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தின. சிராஜுதீன் என்பவரின் வீட்டை முழுவதும் உடைத்து சேதப்படுத்திய யானைக்கூட்டம், சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் கோயில் மற்றும் மரங்களையும் சேதப்படுத்தியுள்ளன. யானைகள் வருவதை கட்டுப்படுத்த, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved