Also Watch
Read this
By: Web Team

ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூடப்பட்டுள்ளதால், வேலையில்லாமல் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி, விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
7 மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, விவசாயிகளின் விளைபொருட்களை மின்னணு முறையில் ஏலம் விடவும், விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து வியாபாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved