Also Watch
Read this
By: Web Team

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை, வரும் 18ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவு குறித்த வழக்கு விசாரணையின் போது, 19 மாவட்டங்களில் 100 சதவீதமும், பத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 90 சதவீதமும், சென்னையில் 31 சதவீதமும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 24ஆம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் எச்சரித்த நிலையில், வரும் 18ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என வருவாய் துறை சுற்றறிக்கை அனுப்பியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved