Also Watch
Read this
By: Web Team

புதுச்சேரி காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் இலங்கையை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 16ஆம் தேதி காரைக்காலில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இலங்கையில் இருந்து படகு மூலம் காரைக்காலுக்கு வந்த இருவரை போலீசார் கைது செய்து படகையும் பறிமுதல் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved