Also Watch
Read this
By: Manigandan Raja

தேனி அருகே உள்ள அம்பாசமுத்திரம் கிராமத்தில் நியாய விலை கடை இயங்கி வருகிறது இந்த கடையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்கள் குடும்ப
அட்டைதாரர்களுக்கு குறைவாக வழங்கி அதனை வெளிச்சந்தையில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த ரேஷன் கடையில் ரேஷன் பொருட்களுக்காக பொதுமக்கள் பலர் கூட்டமாக காத்துக் கொண்டிருந்த நிலையில் நியாய விலை கடை ஊழியர்களின் உதவியுடன்
ரேஷன் கடைகள் உள்ளே சென்ற நபர் அங்கு தான் கொண்டு வந்திருந்த இரண்டு சாக்கு பைகளில் அங்கு இருந்த அரிசியை முழுமையாக நிரப்பி கொண்டு பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தனது இரு சக்கர வாகனத்தில் வைத்து ரேஷன் அரிசினை கடத்திச் சென்றார்.
ரேஷன் பொருளுக்காக மக்கள் மணி கணக்கில் காத்துக்கொண்டிருந்த சூழலில் அவர்கள் கண்முன்னே நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved