Also Watch
Read this
By: Manigandan Raja

ரம்ஜான் நோன்பு சகர் விருந்து :
சென்னை பாடி பகுதியில் அமைந்துள்ள ஜூம்மா பள்ளிவாசலில் 25வது ஆண்டு பத்ரு சஹாபாக்கள் நினைவு தின பெருவிழா நடைபெற்றது. பத்ரு சஹாபாக்கள் நேரவை சார்பில்
இரவு முதல் விடியற்காலை வரை பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெற்ற இந்த விழாவில் பத்தாயிரம் இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின்போது 10,000 பேருக்கு சகர் உணவு விருந்து வழங்கப்பட்டது. விடிய விடிய அனல் பறந்த மட்டன் பிரியாணியை இஸ்லாமிய சகோதரர்கள் சாப்பிட்டனர். இரவு நேரத்தில் சிறப்பு
தொழுகைகள் மற்றும் ஆன்மீக இமாம்களின் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் திரளான இஸ்லாமிய சகோதரர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை கேட்டுறிந்தனர். இரவு 10 மணி அளவில் தொடங்கிய இந்த விழா காலை வரை கோலாகலமாக நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved