Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளிக்கு சென்று காணாமல் போனதாக ஊரெல்லாம் தேடப்பட்ட 12 வயது சிறுமியை வீட்டிலேயே கட்டிலுக்கு அடியில் இருந்து போலீசார் மீட்டனர். கோவிந்தாபுரத்தை சேர்ந்த சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், தாத்தா கோவிந்தசாமி வயலுக்கு சென்று திரும்பிய போது பேத்தி இல்லாததால், தனியாக பள்ளிக்கு சென்றிருப்பார் என்று நினைத்துள்ளார். பள்ளிக்கும் சிறுமி செல்லாததால் அதிர்ச்சியடைந்த கோவிந்தசாமி, பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால், வீட்டிலேயே மீண்டும் சோதனை செய்த போது சிறுமி தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved