Also Watch
Read this
By: Manigandan Raja

புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் கும்பாபிஷேக பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்து 2 அரை ஆண்டுகளாக தங்கத்தேர் வீதி உலாவிற்கு பயன்படுத்தாமல் தனி அறையில் பூட்டி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தங்கத்தேரை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாக தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான துணை ஆணையர் சங்கர், உதவி ஆணையர் கார்த்திகேயன், நகை மதிப்பிட்டு
வல்லுநர் குருமூர்த்தி உள்ளிட்டோர் தங்கத்தேர் பூட்டி வைக்கப்பட்டிருந்த அறையைத் திறந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதை எடுத்து மீண்டும் தங்கத்தேர் வீதி உலா பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved