Also Watch
Read this
By: Manigandan Raja

புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்று வரும் புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசு தலைவரின் வண்ண கொடி வழங்கும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அங்கு காவல்துறை அணிவகுப்பில் நின்று கொண்டிருந்த பெண் காவலர்கள் உட்பட 10 க்கும் மேற்பட்ட காவலர்கள் கடுமையான வெப்பத்தை தாங்க முடியாமல் மைதானத்திலேயே துப்பாக்கிகளுடன்
மயங்கி விழுந்தனர்.

உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் மயங்கி விழுந்த காவலர்களை மீட்டு ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved