Also Watch
Read this
Posted on: Dec 11, 2025 06:08 AM
By: Web Team

சென்னையில் 7 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "பி" பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியான எண்ணூர் பகுதியை சேர்ந்த சத்யா என்கிற அட்டு சத்யாவை 7 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் விரட்டி வந்துள்ளது. தப்பிப்பதற்காக, திருவொற்றியூர் பகுதிக்குள் நுழைந்த சத்யாவை, அக்கும்பல் சரிமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. எண்ணூர் பொய் விஜய் கொலைக்கு பழிக்குப்பழியாக இக்கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved