Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூரில் இளைஞரை சாதி பெயரை சொல்லி தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பெரிய குப்பம் பகுதியில் சிவா என்பவர் தனது நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற பாமக கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவரின் கார் திடீரென திரும்பியதால் இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அப்போது நேரில் வந்த பாமக கவுன்சிலரின் கணவர், சிகிச்சைக்கு உதவுவதாக கூறினேன், ஆனால் தற்போது முடியாது எனக் கூறி சாதி பெயரை கூறி தாக்கியதாக தெரிகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved