news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நீடித்த மின்தடை
tv

Also Watch

tv

Read this

காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நீடித்த மின்தடை

வடபெரும்பாக்கம், சென்னை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மின்தடை

சென்னை மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடபெரும்பா க்கம் பகுதியில் இன்று காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நீடித்த மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கி வரும் இப் பகுதியில், நீண்ட நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தொழிற்சாலைகளின் உற்பத்திப் பணிகளும் முடங்கியதால் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் மின்விநியோகம் சீராகாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் மின்வாரிய அதிகாரிகளும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நேர மின்தடைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் போராட்டம் நடத்திய பொது மக்களிடம் காவல்துறை சமரச பேச்சுவார்த்தை பின் கலைந்து சென்றனர்.

Related Link
பொய் வழக்கு, சிறைக்கு அஞ்சமாட்டோம் என கனிமொழி பேச்சு

பொய் வழக்கு, சிறைக்கு அஞ்சமாட்டோம் என கனிமொழி பேச்சு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கடந்த 15 நாட்களில் 2-ஆவது முறையாக அரிசி விலை உயர்வு

0
1 hr 1 min agoshare
திருவாரூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau