Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதோடு, அலைகள் பல அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக எழுந்து வருகின்றன.
பாதுகாப்பு கருதி ஆரோக்கியபுரம், கோவளம், மணக்குடி முதல் நீரோடி வரையிலான நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved