Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கடை அமைத்தவரை குடும்பத்துடன் வீட்டுக்குள் வைத்து அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து சுயம்புராஜ் என்பவர் தனது வீட்டின் முன்பு மரபட்டறை அமைத்து நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி, கோவில் நிலத்தை காலி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில், அவர் அவகாசம் கேட்டதாக தெரிகிறது.
ஆனால் அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் குழந்தையுடன் வைத்து வீட்டை பூட்டி சீல் வைத்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved