Also Watch
Read this
By: Web Team

கல்வராயன் மலையில், கோழியை சுடுவதற்காக, சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட போது பக்கத்து வீட்டில் இருந்தவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து, இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள மேல் மதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி மகன் அண்ணாமலை. இவர், அவரது மருமகனுக்கு கோழி அடித்து குழம்பு வைப்பதற்காக அவரது வீட்டில் வளர்த்து வந்த கோழியை பிடிக்க முயன்றார்.
அப்போது, சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் கோழியை சுட்டுள்ளார். ஆனால், குறி தவறி பக்கத்து வீட்டில் இருந்த பிரகாஷ் தலைமீது துப்பாக்கி குண்டு பாய்ந்து, அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கரியாலூர் போலீசார், சட்டவிரோத கள்ளத் துப்பாக்கி பதுக்கி வைத்து பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர், தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved