news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews உரிய அனுமதி இன்றி பட்டா நிலத்தில் மண் திருட்டு
tv

Also Watch

tv

Read this

உரிய அனுமதி இன்றி பட்டா நிலத்தில் மண் திருட்டு

வேப்பம்பட்டி, தேனி

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN Sand theft

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வேப்பம்பட்டி கிராமத்தில், உரிய அனுமதி இன்றி பட்டா நிலத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளிய 4 லாரிகளை, வருவாய்த்துறை அதிகாரிகள் சிறைபிடித்தனர். இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து உத்தமபாளையம் வட்டாட்சியர், வேப்பம்பட்டி கிராமத்துக்கு சென்ற போது அங்கு மண் திருட்டில் ஈடுபட்டவர்கள் லோடுடன் நின்ற லாரிகளை மட்டும் விட்டு விட்டு, ஜேசிபி இயந்திரம் உள்ளிட்ட மற்ற வாகனங்களுடன் தப்பி ஓடினர். இதையடுத்து லாரிகளை கைப்பற்றி ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த உத்தமபாளையம் டி.எஸ்.பி பொன்னரசன், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 14052026

0
6 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 14052026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved