Also Watch
Read this
By: Fyrose Banu

மதுரை மாவட்டம் சோழவந்தான் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் இவரது மனைவி ராஜலெட்சுமி. இவர் அப்பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் இவரது வீட்டில் நேற்று பர்தா அணிந்த இரு பெண்கள் நுழைந்து ராஜலெசுமியை கயிற்றால் கை, கால்களை கட்டிப் போட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்து 6 சவரன் தங்க செயினை பறித்து மின்னல் வேகத்தில் தப்பினர். சம்பவம் அறிந்து அங்கு வந்த சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் இரு பெண்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது, அன்னபூரணி (41) மற்றும் கனிமொழி (36) என்பது தெரியவந்தது இருவரையும் கைது செய்த போலீசார் 6 சவரன் தங்க செயினை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved