Also Watch
Read this
By: Manigandan Raja

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதாலும் இன்று நாராயண குரு ஜெயந்தியை ஒட்டி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
அந்த வகையில் குமரியின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியிலும் மக்கள் கூட்டம் அதிகமாக வருகை தந்துள்ளனர். குறிப்பாக கேரளா சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
அருவியில் அனைத்து பகுதிகளிலும் மிதமான தண்ணீர் கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாகவும் நண்பர்களுடனும் நீண்ட நேரம் குளித்து மகிழ்கின்றனர்.
மேலும் அருவியின் அருகில் உள்ள நீச்சல் குளம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளுடன் விளையாடியும் இயற்கை அழகை ரசித்து செல்ஃபி எடுத்தும் செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் கடைகளில் வியாபாரம் களைகட்டி உள்ளதால் இங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved