Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் டேங்கர் மூடி திறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தண்டையார்பேட்டையில் இருந்து மைசூருக்கு எரிபொருள் ஏற்றிக்கொண்ட சரக்கு ரயிலின் டேங்கில் இருந்து அதிக சத்தம் ஏற்பட்டதை அறிந்த ரயிலின் கார்ட் ஆவடி ரயில் நிலையத்தை தொடர்பு கொண்டார்.
ஆவடி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி சோதனை செய்த போது ஒரு டேங்கரின் மூடி திறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் உடனடியாக மூடி பொருத்தப்பட்ட பிறகு ரயில் புறப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved