Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் பூமலை குண்டு கிராமத்தில் பெண்ணின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ராமர் என்பவரின் மனைவி மயில் தாயின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இடப் பிரச்சனை தொடர்பாக ராமர் மற்றும் கிராம மக்கள் இடையே இருந்த முன் விரோதம் காரணமாக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved