Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வனத்துறை சார்பில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பறவைகளை கணக்கெடுத்தனர். முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்திக்காடு மற்றும் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் மாதம் வெளிநாட்டு பறவைகள் வலசை வந்து செல்வதுண்டு. தற்போது நீர் காகம் சிரவி, அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, சாம்பல் கொக்கு, பாம்பு தார பறவை என ஏராளமான நீர் வாழ் பறவைகள் வலசை வந்துள்ள நிலையில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved