ஆத்தூரில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கூட்டத்தில் வகுப்பை கவனிக்காமல் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த அலுவலர்களின் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வைருகிறது.செல்போனில் மூழ்கிய அலுவலர்கள்ஆத்தூரில் சட்டமன்ற பொது தேர்தலை ஒட்டி ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி தனி சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பு கூட்டத்தில் தேர்தலின் போது வாக்கு இயந்திரத்தை கையாளும் முறைகள் குறித்தும், படிவங்களை பூர்த்தி செய்வது குறித்தும் பல்வேறு செயல்முறை விளக்கங்கள் காணொளி மூலம் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. காதில் ஹெட் போன் மாட்டியபடி..இதில் இரு சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மண்டல அலுவலர்கள், மண்டல துணை அலுவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது அலுவலர்களில் சிலர் செல்போன்களை பார்த்துக் கொண்டும் ஒரு சிலர் காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு செல்போன்களை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Related Link குறிசொல்வது போல் 5 சவரன் நகைகளை அபேஸ் செய்த நபர்